நத்தம், நத்தம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆடி மாத பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் கைலாசநாதர்க்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் ஆலயத்தில் உள்ள நந்தி சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதைப் போலவே சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் உள்ள சிவசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் -1008 சிவலிங்கம் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர், வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.