மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 05:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு பழவியாபாரிகள் சங்கத்தினர் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் கடைவெள்ளியை முன்னிட்டு நகர பழவியாபாரிகள் சங்கத்தினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து ஏராளமான பழ வியாபாரிகள் பால்குடம் எடுத்து, பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் சிவதாண்டவ நடனத்துடன், மேள தாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இதில் சில பக்தர்கள் வீதியிலேயே அருள்வந்து ஆடினர். அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பாஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.