புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2022 09:08
புவனகிரி: மகான் ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் 35 வது ஆண்டு ஆராதனை விழா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை சார்பில் இன்று காலை பல்வேறு அபிஷேகங்களுடன் நடந்தது. மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த கடலுார் மாவட்டம், புவனகிரியில் ஆராதனை விழா கடந்த 34 ஆண்டுகளாக வெகு விமர்சியாக நடந்து வருகிறது. தற்போது 35 வது ஆராதனை விழா கடந்த 12ம் தேதி காலை 9.00 மணிக்கு பூர்வ ஆராதனையுடன் துவங்கியது. மந்தராலய மரபின் படி பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்,சுவேத நதி தீர்த்தத்துடன் நடந்தது. பல்வேறு பூஜைகளுக்குப் பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜைகளை நரசிம்மாச்சாரியார் புதல்வர்கள் ரகு ஆச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். 13 ம் தேதி பூர்வ ஆராதனையை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 பேரும் செய்தனர். இன்று 14 ம் தேதி உத்திர ஆராதனையை பல்வேறு பகுதிகைளச் சேர்ந்த 21 பேர் பங்களிப்பாக நடந்து. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது திருவாரூர் பக்தவச்சலம் குழுவினரின் ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.