தியாகராஜ சுவாமி பிறந்த நாள் சிறப்பு பஜனை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2026 09:04
புதுச்சேரி: சத்குரு தியாகராஜ சுவாமிகள் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா, எல்லைபிள்ளைச்சாவடி சிருங்கேரி, சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் கடந்த 23ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.
நேற்று 3ம் நாள் விழாவையொட்டி, சென்னை சாய் விக்னேஷ் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. முன்னதாக காலை உஞ்சவருத்தி பஜனை, கலைமாமணி ஜெகதீசன் குழுவினரின் பாட்டு, பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை கலை நிகழ்ச்சி மற்றும் பஜனை நடக்கிறது.