அன்னூர்: தேய்பிறை அஷ்டமியான இன்று அன்னூர் வட்டாரத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பைரவர் சன்னதியில், இன்று இரவு 8:00 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று இரவு 7:00 மணிக்கு, பால், நெய், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது, அலங்கார பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.