கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப் பகுதியில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடந்தது. கொடைக்கானல் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பண்ணைக்காடு ஸ்ரீ ஹரி பஜனை மடாலயத்தில் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் கோகுலாஷ்டமியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சிறுவர் சிறுமியர்கள் கிருஷ்ணன் வேடமணிந்திருந்தனர். விழாவில் புராதான கிருஷ்ணன் சிலைக்கு வெண்ணெய் ஊட்டும் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தாண்டிக்குடி ராமர் கோயிலிலும் விழா சிறப்பாக நடந்தது.