அவிநாசி: எல்லை மாகாளியம்மன் கோவில் 35ம் ஆண்டு பொங்கல் விழா, மஞ்சள் நீராட்டுடன் நிறைவடைந்தது.
அவிநாசியில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடக்கு நோக்கி நின்ற காலத்தில் எல்லையை காக்கும் தெய்வமாக மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனையடுத்து 35ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த திங்களன்று விநாயகர் வழிபாடு மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம், பூவோடு, மங்கள வாத்தியம் மற்றும் வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்சிகளுடன் விழா நடைபெற்றது மேலும் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் விழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.