Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழியில் சொக்கநாதர் பூஜை மடம் ... அமெரிக்காவில் 2,500 பேர் பகவத் கீதை பாராயணம் அமெரிக்காவில் 2,500 பேர் பகவத் கீதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீரப்பாளையம் சோமநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கீரப்பாளையம் சோமநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2022
02:08

புவனகிரி: கீரப்பாளையம் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசோமநாதர், ஸ்ரீபூர்ணாம்பிகா, புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந்தது. சுற்றுபகுதியைச் சேர்ந்தவர்களுடன் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டினர் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசோமநாதர் மேற்கு பக்கம் பார்த்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீபூர்ணாம்பிகா, புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இக்கோவில் குலதெய்வ வழிபாட்டினர் வசிக்கின்றனர். இக்கோவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாகநடந்தது. விழாவை யொட்டி கடந்த 17 ம் தேதி தேவதா, அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. தினசரி பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்குப் பின் கடம் புறப்பாடு துவங்கி, கோவிலை வலம் வந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந்தது. கீரப்பாளையம் சேர்மன் கனிமொழிதேவதாஸ்படையாண்டவர் மற்றும் சுற்றுபகுதியைச் சேர்ந்தவர்களுடன் தமிழகம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று 22 ம் தேதியில் இருந்து மண்டல அபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar