Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்ணரை சித்தி விநாயகர் கோவில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர அமைச்சர் (நடிகை) ரோஜா தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சாரடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சாரடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
10:08

மயிலாடுதுறை: சீர்காழியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு சாரடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்னதாக கும்பாபிஷேகம்  நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த இக்கோவில்  திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த 22ம் தேதி முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நாலாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியம் இசைக்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. காலை 6:45 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சாரடி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களாக பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar