காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர அமைச்சர் (நடிகை) ரோஜா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2022 11:08
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் (நடிகை)ரோஜா சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோவிலுக்குள் சென்ற அமைச்சர் ரோஜா சிறப்பு( ₹.5000/) ராகு கேது பூஜையில் ஈடுபட்டார் .அதனைத் தொடர்ந்து கோயிலில் நடக்கும் ருத்ராபிஷேகம் மற்றும் கால பைரவர் அபிஷேகத்தில் கலந்துக் கொண்டார் .இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை அம்மையாரையும் மூலவர் சன்னதியில் தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினார்.