பதிவு செய்த நாள்
01
செப்
2022
06:09
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று அதிகாலை,6:00 மணிக்கு, பல்வேறு இடங்களிலும், கணபதி ஹோமத்துடன், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் சார்பில், 8 சிலைகளும், இந்து முன்னணி, 5 சிலைகளும், பா.ஜ., 3 சிலைகளும், விஸ்வ ஹிந்து பரிஷத், 1 சிலையும், அகில பாரத இந்து மகா சபை, 1 என, மொத்தம், 18 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் சார்பில், 34, இந்து முன்னணி, 14, பா.ஜ., 3, விஷ்வ ஹிந்து பரிஷத், 2 என, மொத்தம், 53 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் சார்பில், 26, இந்து முன்னணி, 12, விஷ்வ ஹிந்து பரிஷத், 1 என மொத்தம், 39 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள், 24, இந்து முன்னணி, 18, வன விநாயகர் சதுர்த்தி குழு, 6, பா.ஜ., 2, இந்து மக்கள் கட்சி, 1 என, மொத்தம், 51 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள், 7, வன விநாயகர் சதுர்த்தி குழு, 7, இந்து முன்னணி, 4 என, மொத்தம், 18 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நேற்று, மொத்தம், 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள், நாளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சாடிவயல் சின்னாறு, போளுவாம்பட்டி நொய்யல் ஆறு, நரசம்பதி குளம், பேரூர் மற்றும் சுண்டக்காமுத்தூர் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.