மூணாறில் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2022 06:09
மூணாறு: மூணாறு அருகே தேவிகுளத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யானை ஊட்டு எனும் யானைக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மூணாறிலும் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடந்தது. நகரில் உள்ள காளியம்மன் நவகிரக கிருஷ்ணன் கோயிலில் 1008 தேங்காய்களை பயன்படுத்து கணபதி ஹோமம் நடந்தது. அதன்பிறகு கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. நகரில் மகாத்மா காந்தி சிலை அருகே ஆட்டோ டிரைவர்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்து வருகின்றன. அதேபோல் சுற்றுலா கார் டிரைவர்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடந்து வருகின்றன.
யானை ஊட்டு: மூணாறு அருகே தேவிகுளத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் கட்டுப்பாட்டில் தர்மா சாஸ்தா எனும் அய்யப்பன் கோயில் உள்ளது. அங்கு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடந்தது. காலையில் விநாயகருக்கு 108 தேங்காய்கள் பயன்படுத்தி கணபதி ஹோமம் நடந்தது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு யானை ஊட்டு எனும் யானைக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு திருச்சூரில் இருந்து புத்தூர் மகேஸ்வரன் என்ற ஆண் யானை கொண்டு வரப்பட்டு உணவு வழங்கப்பட்டது. கோயிலில் மேல்சாந்தி ரமேஷ்சாந்தி தலைமையில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. மாலையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறைச்சல்பாறை அருகில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டது.