Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசலிலே பூக்கோலம் வீட்டினிலே ... ஆரோக்கியமாக வாழ... எளிய விரதம்!
முதல் பக்கம் » துளிகள்
ஓண சத்ய.. 9 சுவை உணவு!
எழுத்தின் அளவு:
ஓண சத்ய.. 9 சுவை உணவு!

பதிவு செய்த நாள்

07 செப்
2022
06:09

கேரளாவில் ஓணம் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் துவங்கி திருவோணம் வரை விழா நடத்தப்படும். தங்கள் நாட்டை சிறப்புடன் ஆண்ட மன்னர் மகாபலியை வரவேற்கும் விதத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர நாட்களில், ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில், 64 வகை உணவு தயாரிக்கப்படும். ஐந்தாம் நாள் அனுஷத்தன்று, பாரம்பரிய படகுப்போட்டி நடத்தப்படும். ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் நாட்களில் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், கோலமிடுதல் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பத்தாம் நாள் திருவோணத்தன்று மூவகை பாயாசம், சிறப்பு உணவு வகைகள் என களை கட்டும். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை அப்பன் கோயிலில் (வாமனர் கோயில்) வாமனருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இங்கே மகாபலி அமர்ந்து ஆட்சி செய்த சிம்மாசனமும் வைத்துள்ளனர்.

மன்னருக்கு வரவேற்பு: மகாபலி மன்னர் மலைநாடாக விளங்கிய கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவரது ஆட்சி செழிப்பாக இருந்தது. தானம், தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சி போல், இன்றும் தங்கள் மண் செழிப்புடன் திகழ வேண்டும் என்ற கருத்தில், மகாபலியை நினைவு கூர்ந்து, அவரை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஓண சத்ய..: ஓணத்தன்று கேரள மக்கள் சாப்பிடும் உணவை ஓண சத்ய என்பர். இதற்கு ஓண விருந்து என்று பொருள். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு தான் நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புத்தம் புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு படைக்கப்படும். பின், குடும்பத்துடன், சாப்பிடுவர்.

 
மேலும் துளிகள் »
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar