Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஆவணி ... சிவகங்கை கோயில் விழா : எருமைகளை பலியிட்டு நேர்த்திக்கடன் சிவகங்கை கோயில் விழா : எருமைகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகையில் கோவிலை மூடியதால் போலீசார் பக்தர்கள் தள்ளுமுள்ளு
எழுத்தின் அளவு:
நாகையில் கோவிலை மூடியதால் போலீசார் பக்தர்கள் தள்ளுமுள்ளு

பதிவு செய்த நாள்

12 செப்
2022
08:09

நாகப்பட்டினம் : நாகையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், பிரசித்தி பெற்ற கோவிலை போலீசார் இழுத்து மூடியதால், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கும், போலீசாருக்கும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் பழமையான, பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக இரண்டாண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால்,  திருவிழா நடைபெறவில்லை.இந்த ஆண்டு கிராம நிர்வாகத்தினர் இரு பிரிவாக செயல்பட்டதால், இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு உருவாகி, இரு தரப்பினரும் தனித்தனியாக பால் அபிஷேகத்திற்கு  ஏற்பாடு செய்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், இரு தரப்பினரிடையே சுமூக தீர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் முயற்சி பலனளிக்காததால், கலெக்டர் அருண் தம்புராஜ்  உத்தரவுப்படி, கோவிலை நேற்று அதிகாலை போலீசார் இழுத்து மூடினர்; ஏராளமான போலீசார் கோவில் முன் குவிக்கப்பட்டனர்.

வழக்கம்போல் காலை, 5:00 மணி முதல் பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.  இதனால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் கோவில் முன் சாமியாடி மயங்கியதால் பதற்றம் அதிகரித்தது. ஆர்.டி.ஒ., முருகேசன், ஏ.டி.எஸ்.பி.,  திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள், இருதரப்பினரிடையே பேச்சு நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கு பின் தீர்வு எட்டப்பட்டு, கோவிலை போலீசார் திறந்து விட்டனர்.அப்பகுதியில் தொடர்ந்து  பரபரப்பான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar