பதிவு செய்த நாள்
28
செப்
2022
07:09
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிறுமுகை ஆலங்கொம்பு அருகே, தென் திருமலையில் தென் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நேற்று மாலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறும். அக்., 1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலையை மலையப்ப சுவாமிக்கு அணிவித்து சிறப்பு பூஜை செய்வர். அன்று இரவு, 7:30 மணிக்கு கருட சேவையும், இரண்டாம் தேதி காலை அனுமந்த வாகனத்தில் திருவீதி உலாவும், மாலையில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. அக்., 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருகிறார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கே.ஜி., குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன், மற்றும் கே.ஜி. டெனிம், கண்ணபிரான் மில்ஸ் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.