Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் ... மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தற்காலிக மேற்கூரை அகற்றம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லை, குலசையில் தசரா விழா நிறைவு
எழுத்தின் அளவு:
நெல்லை, குலசையில் தசரா விழா நிறைவு

பதிவு செய்த நாள்

07 அக்
2022
02:10

திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் நேற்று மாலை காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் நவராத்திரி தசரா விழாவைப் போல தமிழகத்தின் தென்கோடியில் திருநெல்வேலி, பாளை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். குலசேகரபட்டினத்தில் கடந்த 26ம் தேதி காலை தசரா விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிசேக, ஆராதனைகளுடன் இரவில் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. சிங்கமுகன், எருமை, சேவல் முகங்களில் வந்த சூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அபிசேக ஆராதனை நடந்தது. நேற்று காலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். மாலை 4:00 மணிக்கு சப்பரம் கோயில் வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் காப்புகளை அவிழ்த்து, வேடம் கலைந்து, விரதத்தை நிறைவு செய்தனர். திருநெல்வேலி, பாளையில் நடக்கும் தசரா விழாவில் முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், உலகம்மன் என 12 சப்பரங்கள் வீதி உலா வந்தன. நேற்று காலை ராமசாமி கோயில் முன்பும் மாலையில் கோபாலசாமி கோவில் முன்பும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பாளை., மார்க்கெட் அருகே எருமை கிடா மைதானத்தில் சூரசம்காரம் நடந்தது. அதேபோல திருநெல்வேலி டவுனில் உள்ள பல்வேறு 34 அம்மன் கோயில்களில் இருந்து சப்பரங்கள் எடுத்துவரப்பட்டு சக்தி தரிசனம் நடந்தது. தென்மாவட்டங்களில் நடந்த நவராத்திரி தசரா விழா நேற்று இரவு உடன் நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை:  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்;திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருநாகேஸ்வரருக்கு வருடாபிேஷகம் ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் ... மேலும்
 
temple news
செங்கை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar