Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுசீந்திரம் முன்னுதித்த நங்கைக்கு ... அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் அதிசய முதலை இறப்பு அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் அதிசய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலுக்குள் வெள்ளம் : அதிகாரி மெத்தனம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலுக்குள் வெள்ளம் : அதிகாரி மெத்தனம்

பதிவு செய்த நாள்

10 அக்
2022
10:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அதிகாரிகள் மெத்தன போக்கால் வாறுகால் மூடி உடைத்ததால், மழைநீர் குளம்போல் தேங்கியது.

ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி மேற்கூரையில் விழும் மழை நீர் முதல் பிரகாரத்தில் இறங்கி, அங்குள்ள ஒரு அடி அகலமுள்ள வாறுகால் வழியாக வெளியேறும். சில சமயம் கன மழையால் வாறுகால் கொள்ளளவு தாங்காமல், அதில் இருந்து வெளியேறி பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. இதனை தடுக்க 4 ஆண்டுக்கு முன் கோயில் நிர்வாகம் வாறுகாலை ஒரு அடி உயர்த்தி, அதன் மீது கான்கிரீட் மூடி அமைத்தனர். இதனால் பிரகாரத்தில் மழை நீர் தேங்கவில்லை.

இந்நிலையில் சுவாமி தரிசனம் முடித்து வரும் பக்தர்கள் வரிசையில் செல்ல வேண்டி இருமாதம் முன்பு உயர்த்திய வாறுகாலை அதிகாரிகள் உடைத்தெறிந்து, நடைபாதை அமைத்தனர். தற்போது இந்த நடைபாதையும் பயன்பாட்டில் இல்லை. இதனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் உடைத்தெறிந்த வாறுகால் வழியாக மழைநீர் வெளியேறி பிரகாரத்தில் குளம்போல் தேங்கியது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறுகையில் : கோயில் உள்கட்டமைப்புகள், இங்கு மேம்படுத்திய வசதிகள் குறித்து சக ஊழியரிடம் கருத்தறியாமல், வாறுகாலை உடைத்தெறிந்த செயல் அதிகாரியின் மெத்தன போக்கை காட்டுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து, வரும் காலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அய்யங்குளத்தில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar