Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உண்டியல் எண்ணிக்கையில் பாதுகாப்பு ... காலபைரவர் கோவில் மண்டல பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் என்ன நடக்கிறது ; பக்தர்களுக்கு அநீதி : வி.ஹச்.பி., புகார்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் என்ன நடக்கிறது ; பக்தர்களுக்கு அநீதி : வி.ஹச்.பி., புகார்

பதிவு செய்த நாள்

25 நவ
2022
02:11

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் அதிகாரி அலட்சியத்தால், பக்தர்களுக்கு பாதுகாப்பு இன்றி அசாதாரண சம்பவம் நடப்பதாக முதல்வருக்கு வி.ஹெச்.பி., மனு அனுப்பியது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீர்திருத்தம் என்ற பெயரில் கடந்த சில மாதமாக கோயில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாக்கியும், கோயில் சிலைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இதில் 4.8.22ல் கோயில் ஊழியருடன் ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து கோயில் உண்டியலை திறந்து எண்ணினார்கள். இதில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடி வீடுக்கு எடுத்து சென்று, பின் போலீசார் கைது செய்தனர். நவ., 19ல் கோயில் செக்யூரிட்டி காவலர்கள் பக்தர் ஒருவரை தரக்குறைவாக பேசி, சரமாரியாக தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். நவ.,20ல் கோயில் மைய மண்டபத்தை ஆன்மிக மரபை மீறி தடுப்பு வேலியில் மூடினர். நவ., 23ல் சீர்பாதம் தொழிலாளிகள் இன்றி தங்க தேரை இழுத்ததில், தெலுங்கானா பெண் பக்தர் காயமடைந்தார். இக்கோயில் அதிகாரியின் அலட்சியமே பக்தர்கள் பாதிக்கின்றனர் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து வி.ஹெச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : கோயில் துணை ஆணையர், இறைபக்தி இன்றி பக்தர்கள் மீது அக்கறை இன்றி ஆன்மிக மரபு மீறி தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளார். மேலும் இரவு நடை சாத்திய பின் கோயில் பிரகாரத்திற்குள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு மராமத்து பணிகள் நடக்கிறது. இதனால் பழமையான சிலைகள் திருடு போகும் அபாயம் உள்ளது. அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் கோயிலில் தொடர்ந்து அசாதாரண சம்பவங்கள் நடக்கிறது. இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar