Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது ... திருப்பரங்குன்றத்தில் ‌சுவாமிக்கு பட்டாபிஷேகம்: இன்று மகா தீபம் திருப்பரங்குன்றத்தில் ‌சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று கார்த்திகை மகா தீபம்
எழுத்தின் அளவு:
பழநியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று கார்த்திகை மகா தீபம்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
05:12

பழநி: பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் இன்று மகா தீபம், சொக்கப்பானை ஏற்றப்படும்.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.30 சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, தீபாதரணை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, யாகசாலை தீபாராதனை, தங்கரத புறப்பாடு நடைபெறும் என தினமும் நடைபெற்றது. (டிச.5.,) நேற்று சாயரட்சை பூஜைக்கு பின் பரணி தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், தங்க ரத புறப்பாடு நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4:30 மணிக்கு விளா பூஜை நடை பெறும். பாதுகாப்பு கருதி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் பயன்படுத்த வேண்டும். பிற்பகல் 2:00 மணி அளவில் குடமுழுக்கு நினைவரங்கம், தற்காலிகமாக அடைக்கப்படும். அதன் பின் மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

மலைக்கோயிலில் மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4:45 மணிக்கு சின்னகுமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வந்து தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்படும். தொடர்ந்து சொக்கப்பனையும் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு இன்று மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகாதீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூரில் விண்ணிலிருந்து போர் புரிந்த கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. மிகவும் ... மேலும்
 
temple news
கோவை : சுண்டைக்கா  முத்தூர் பை-பாஸ் ரோடுபொட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் திருக்கோயில் யானை பவானிக்கு ரூ. 43 லட்சத்தில் மணிமண்டபம் கட்டும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar