Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ... மஹா தீபத்தை காண வி.ஐ.பி.,க்களுக்கு கூடாரம் அமைத்து போலீஸ் பாதுகாப்பு மஹா தீபத்தை காண வி.ஐ.பி.,க்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் கங்கை தீர்த்தம் நோ : பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் கங்கை தீர்த்தம் நோ : பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
05:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகத்திற்கு கங்கை தீர்த்தம் சப்ளை இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை நீராடி தரிசிக்க தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளாக உத்தரகாண்ட் ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை நீரை சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜை நடக்கும். மேலும் பக்தர்களுக்கு வில்வ இலையுடன் கோடி தீர்த்தமும் பிரசாதமாக வழங்குவர்.

இதனை கண்டு பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதி தரிசனம் செய்வார்கள். இதில் கங்கை தீர்த்தத்தை 200 மி.லி., அளவில் பித்தளை கலசத்தில் அடைத்து ரூ.50 க்கு கோயில் நிர்வாகம் விற்றது. ஆனால் கடந்த ஓராண்டாக ஹரித்துவாரில் இருந்து நன்கொடையாளர் வழங்கிய கங்கை தீர்த்தத்தை பெற கோயில் அதிகாரி கவனம் செலுத்தாமல் கைவிட்டார். இதனால் தற்போது சுவாமிக்கு கங்கை அபிஷேகமும், பக்தருக்கு தீர்த்தம் விற்பதும் இல்லை. இதனால் பக்தர்கள் கங்கை அபிஷேகம் செய்ய முடியாமல், தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து ராமேஸ்வரம் சேர்ந்த புரோகிதர் ராமு கூறுகையில் : கங்கை தீர்த்தத்தை பெற பல முறை வலியுறுத்தியும் கோயில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் சுவாமிக்கு கங்கை தீர்த்த அபிஷேகம் இல்லை, பக்தர்களுக்கு சப்ளையும் இல்லை. அதிகாரிகள் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளதால், பாரம்பரிய மரபுகளை காற்றில் பறக்க விடுகின்றனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar