Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் 1008 ... திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது; உயர் நீதிமன்றம் திருச்செந்தூர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரவில் தடை.. காலையில் அனுமதி: மன்னர் கால மரபை மாற்ற திமுக அரசு முயற்சி?
எழுத்தின் அளவு:
இரவில் தடை.. காலையில் அனுமதி: மன்னர் கால மரபை மாற்ற திமுக அரசு முயற்சி?

பதிவு செய்த நாள்

10 டிச
2022
09:12

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க இரவில் விதிக்கப்பட்ட தடை, நேற்று காலையில் நீக்கப்பட்டதால், காவடி பவனி புறப்பட்டு சென்றது. மன்னர் கால மரபை மாற்ற தி.மு.க. அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூருடன் இணைந்திருந்த போது மன்னர் உத்தரவுப்படி, கார்த்திகை கடைசி வெள்ளியில் குமாரகோவிலுக்கு காவடி எடுப்பது வழக்கம். மன்னர் ஆட்சி மறைந்த பிறகும் இந்த மரபு கடை பிடிக்கப்படுகிறது. நேற்று கடைசி வெள்ளி என்பதால் நேற்று முன்தினம் இரவு தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க வேண்டாம் என்று மேலிட உத்தரவு வந்ததால் காவடி அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் நிறுத்தப்பட்டன. இதுபற்றி தகவல் தெரிந்து பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் ஏராளமானோர் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். போலீஸ் எடுக்காத பட்சத்தில் அங்கிருந்து காவடி எடுக்க இவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அதிகாலையில் மீண்டும் போலீசிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காலையில் காவடிகள் புறப்பட்டு சென்றன. மன்னர் காலத்தில் இருந்து வரும் மரபுகளை தி.மு.க., அரசு மாற்ற முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதுபோல தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து , பறக்கும் காவடி, வேல்காவடி, மலர் காவடி என நுாற்றுக்கணக்கான காவடிகள் குமாரகோவிலுக்கு வந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar