Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்ம சூத்திர குறியீட்டுடன் 11 அடி ... சிவன் கோயில்களில் கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேகம் சிவன் கோயில்களில் கார்த்திகை கடைசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொல்லியல் துறை அலட்சியத்தால் சிதிலமடையும் சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
தொல்லியல் துறை அலட்சியத்தால் சிதிலமடையும் சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

12 டிச
2022
03:12

மேலூர்: மேலுார், கீழவளவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சபாண்டவர் மலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் வரலாற்று சின்னங்கள் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது.

இம் மலையில் சமணர் காலத்து கல் படுக்கைகள், குகைகள் உள்ளது. கி.பி., 2-11 ம் நூற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டு தலமாக இம்மலை இருந்துள்ளது. மலையில் மூன்று தீர்தங்கரர் உருவங்களும்,குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது. தவிர பிராமிய கல்வெட்டுக்கள், கல் படிக்கட்டுகளும் உள்ளன. மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் கோயில்களில் கீழவளவு பகுதி மக்கள் திருமணம் செய்வது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்கள் நிறைந்த இம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெயரளவில் வேலி அமைத்துள்ளனரே தவிர முறையான பராமரிப்பு இல்லை. கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறியதாவது: மெயின் ரோட்டில் இருந்து மலைக்கு செல்வதற்கு பாதை கிடையாது. அதனால் தனியார் இடத்தின் வழியாக செல்கிறோம். பாதை அமைத்து தரக்கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், வருவாய் மற்றும் தொல்லியல் துறையினரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மலையின் முன் பகுதியில் மட்டும் வேலி அமைத்து விட்டு பிற பகுதிகளில் அமைக்காமல் வேலி அமைக்கும் சிமிண்ட் தூன்களை வருடக்கணக்கில் அடுக்கிவைத்துள்னர். பாதுகாவலர் அமைக்கும் முன் குகை மற்றும் மலையில் செதுக்கப்பட்டுள்ள சிலைகள் மீது தகரத்தினால் ஆன கூரைகளை சமூக விரோதிகள் கடத்தி சென்றதால் சிலைகள் மீது மழை மற்றும் வெயில் பட்டு சிதைய ஆரம்பித்துள்ளது. மேலும் இம் மலையை வெளிநாடு, மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்த வரலாற்று துறை மாணவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சபாண்டவர் மலை பரிதாபத்தில் உள்ளதால் தொல்லியல் துறையினர் முறையாக பாதுகாக்க வேண்டும் என்றார். தொல்லியல்துறை அதிகாரி பாலமுருகன் கூறுகையில், "பஞ்சபாண்டவர் மலையின் அடிப்படை தேவைகள் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி போதிய வசதிகள் செய்யப்படும்" என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar