Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... மண்டல பூஜையில் சிலை பிரதிஷ்டை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்: ஜன.13 வரை தினமும் 500 பேருக்கு வழங்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2022
06:12

தஞ்சாவூர், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்ப் பல்கலைக் கழக வளாகம் எதிரே தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், அறுசுவை உணவுடன் கூடிய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சிக்கு சீனிவாச சிவாச்சாரியார் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். அனைவரையும் மாவட்டச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். அன்னதான நிகழ்வை புரவலர் கலா துவக்கி வைத்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், அன்னதான முகாம் அலுவலர்கள்  கணேசன், பொன்னையன், ராஜூ குருக்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர். தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கு வரும் ஜன.13ம் தேதி வரை தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சபரிமலை செல்லும் வழியில் அமுதா நதிக்கரை மற்றும் பம்பையிலும், தஞ்சாவூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஜன.13ம் தேதி மகர ஜோதி தரிசனம் வரை தினமும் அன்னதானம் வழங்க அதற்கான மளிகை மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சுமார் 4 டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; ‘‘காலமும் வரலாறும் இருக்கும் வரை, செம்பை வைத்தியநாத பாகவதரின் இனிமையான குரல் எதிரொலிக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar