Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ பெருமாள் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு: ராப்பத்து உத்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு: ராப்பத்து உத்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2023
01:01

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை உற்ஸவத்தை முன்னிட்டு இரவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அத்யான உத்ஸவம் டிச. 23ல் பகல் பத்து உத்ஸவத்துடன் துவங்கியது. தினசரி  மாலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடந்தது. வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தன்று காலை 10:00 மணிக்கு  திருமாமணி மண்டபத்தில்  உற்ஸவ பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சயன கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 7:00 மணிக்கு  ராஜாங்க சேவையில் எழுந்தருளி அலங்காரதீபம் நடந்தது. ஏகாந்த அபிேஷகம் ஆகி  புறப்பாடாகி தாயார் சன்னதி எழுந்தருளினார்.  வேத விண்ணப்பங்கள், ஆகம சாஸ்தரங்கள் சொல்லப்பட்டது, பின்னர் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி மங்களாஸாஸனம் நடந்தது. தொடர்ந்து சொர்க்கவாசல்   இரவு 10:30 மணி அளவில்  திறக்கப்பட்டு  தீபாராதனை நடந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் கடந்தார். முன்னதாக ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு எதிர்சேவை நடந்தது. பின்னர் ஆழு்வாருக்கு மங்காளாஸாஸனம் நடந்தது. திவ்யபிரபந்தம் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து மும்முறை பத்தி உலாத்துதல் நடந்து.   பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி காப்புக் கட்டி  பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar