Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... இந்து சமய அறநிலைத்துறை முன்பு மாற்று மத சின்னம்: நடவடிக்கை எடுக்க மனு இந்து சமய அறநிலைத்துறை முன்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரருக்கு மஹா தீப மை சாற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரருக்கு மஹா தீப மை சாற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

07 ஜன
2023
09:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், ‘மஹா தீப மை’ சுவாமிக்கு சாத்தப்பட்டு வழிபாடு நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோவிலில், நேற்று,  ஆருத்ரா தரிசன விழா நடந்தது.  இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு,  சுவாமி சன்னதியிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


நேற்று  அதிகாலை, 3:00 மணிக்கு,  கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர்  மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு,  சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது,   கடந்த, டிச., 6ல்,   2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, மஹா தீப  கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம் முதலில் நடராஜர் மற்றும்  சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா...’ என, பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும்  மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் வழி நெடுகிலும் நேர்த்திக்கடன்  செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar