பதிவு செய்த நாள்
08
ஜன
2023
08:01
திருவண்ணாமலை: மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம், பக்தர்களுக்கு வினியோகிக்க, பாக்கெட் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவில், 2,668 அடி உயர, மலை உச்சியில் கடந்த டிச., 6ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, ஐந்தரை அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள், தொடர்ந்து எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, தீப மை உடன், வேம்பு இலை மற்றும் கட்டை, தர்ப்பை, மா இலை மற்றும் மாங்குச்சி, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்த்து அதனுடன், சுவாமி அபி ேஷக விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, ‘மஹா தீப மை’ பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இதை, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரசாதம், மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் கொண்ட தீப மை பிரசாதம், விபூதி மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்கள், பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி கோவில் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.