Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முன்ஜென்ம குறைதீர்த்து முக்தி தரும் ... மரகதாம்பிகை அம்மன் தேருக்கு சக்கரம் வழங்க அறநிலையத்துறை தாமதம் மரகதாம்பிகை அம்மன் தேருக்கு சக்கரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கும்பாபிஷேகம் வரும் பக்தர்களை வரவேற்க தயாராகிறது கோயில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
பழநி கும்பாபிஷேகம் வரும் பக்தர்களை வரவேற்க தயாராகிறது கோயில் நிர்வாகம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2023
11:01

பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக தரிசிக்க வரும் பக்தர்களை வரவேற்க பழநி கோயில் நிர்வாகம் தயாராகி வருகிறது.

பழநி மலைக்கோயிலில் ஜன.26,27 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்க கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதில் மலைக்கோயில் கிரிவீதி மலைக்கோயில் விடுதி வளாகங்கள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் கும்பாபிஷேக தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பிரசாத பைகள் தயாராகி வருகிறது. கிரி வீதி, குடமுழுக்கு மண்டபம் பகுதிகளில் நிழல் கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.27.,ல் கிரிவீதியில் உள்ள கோசலை வளாகம், பழைய நாதஸ்வர பள்ளி, குடமுழுக்கு நினைவு அரங்கம் ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. எல். இ. டி திரைகள், டிவிகள் வைக்கப்பட்டு கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் இருக்கும் பொதுமக்கள் எளிதாக கும்பாபிஷேகம் தரிசிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு நடத்த வகை செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கும்பாபிஷேக கோபுரத்திற்கு மலர் தூவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிரி விதி மற்றும் மலைமீது உள்ள பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் நீர் தெளிக்க வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க ஒரு வழிப்பாதை பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். இது குறித்த முன்னேற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar