பதிவு செய்த நாள்
31
ஜன
2023
08:01
பழநி: பழநி, கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று (ஜன.31) வெள்ளி காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழாவின் ஜன.29ல் கொடி ஏற்றப்பட்டது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இரவு புதுச்சேரி சப்பரத்தில் ரத வீதி உலா நடைபெற்றது. (ஜன.30) நேற்று வள்ளி தெய்வசேனா முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு வெள்ளி ஆட்டுகிடா வாகனத்தில் ரதவீதி உலா நடைபெற்றது. மூன்றாம் நாள் திருவிழாவான (ஜன.31) இன்று வள்ளி,தெவசேனா முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் ரதவீதி உலா நடக்கும். கலைநிகழ்ச்சிகள், மலைக் கோயில், அடிவாரம், குடமுழுக்கு நினைவரங்கத்தில், பக்தி சொற்பொழிவு பக்தி இன்னிசை நடைபெறும். தைப்பூச திருவிழா உற்சவத்தில் ஆறாம் நாளான பிப்.3ல் இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், பிப்.4., திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறும். பிப்.7 அன்று மாலை 7:00 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெறும். இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு பெறும். தினமும் வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.