Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... ஈய்யனூர் கிராமத்தில் 8ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு ஈய்யனூர் கிராமத்தில் 8ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டம் கோவிலில் தைப்பூச விழா விமரிசை
எழுத்தின் அளவு:
குமரகோட்டம் கோவிலில் தைப்பூச விழா விமரிசை

பதிவு செய்த நாள்

06 பிப்
2023
04:02

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் மற்றும் இளையனார் வேலுார் முருகன் கோவில்களில் நேற்று தைப் பூசம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசம் விழாவை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரும் நாள்  முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.இதனால் அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். நேற்று குமரகோட்டம் முருகன் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் அதிகமானதால் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பலர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலுார் கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு, பாலசுப்பிரமணியர் நேற்று முன்தினம் காலை, 4:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ்புத்துார், மேல்புத்துார், ஆசூர், குளத்துார், நெல்வேலி, கீழ்பேரமநல்லுார் ஆகிய கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு நெல்வேலி கிராமத்தில், சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று காலை 5: 00 மணிக்கு சுவாமி கோவிலை சென்றடைந்தார். lகாஞ்சிபுரம், செவிலிமேடு, ஜெம் நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தைப்பூசத்தையொட்டி இக்கோவில் வளாகத்தில் தனி சன்னிதியில் உள்ள சுப்பிரமணியருக்கு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு, 13 அடி உயரமுள்ள பத்துமலை முருகபெருமானுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. பவுர்ணமியையொட்டி, மாலை 6.00 மணிக்கு அபிராமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. விழாவில், செவிலிமேடு மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்னதான பூஜை: சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், 21வது ஆண்டு தைப்பூச அன்னதான பூஜை நேற்று காலை 7:00 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கலைஞர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற பக்திப்பாடல்கள் நிகழ்ச்சியும், 11:45 மணிக்கு தீபஜோதி தரிசனமும் நடந்தது. இதில், வி.என்.பெருமாள் தெரு, கே.எம்.வி., நகர்,  வரதராஜபுரம் தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar