Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த பெருமான் கோவிலில் தை பூச ... ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் தைத்தேரோட்டம் உற்சவம் நிறைவு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2023
07:02

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்லமுத்து குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றன. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தை மாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் சாமி, அம்பாள், விநாயகர், முருகன் உள்ளிட்டோர் வீதி விழா கட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று 9ஆம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேல வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் செல்வமுத்துகுமாரசாமி வள்ளி தெய்வானையோடு வைக்கப்பட்டு மேல தாளங்கள் முழங்க கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் மேல வீதியை வந்து அடைந்தது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், செயல் அலுவலர் அசோகன், திமுக மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தன், வர்த்தக சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேர் திருவிழாவை முன்னிட்டு அகற்றப்பட்ட மின் இணைப்புகள் விழா முடிந்த உடன் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் வேலம்பட்டி‌ அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar