மூலம்: நீதி, நேர்மை, நியாயத்திற்கு கட்டுபட்டு நடப்பவர்களான மூலம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் கேந்திரம் மிகவும் வலுவாக இருப்பதால் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். மறைமுகப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்னைகள் தீரும். பஞ்சமாதிபதி செவ்வாயின் பார்வையால் பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் குறுக்கிடலாம். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: துர்கை அம்மனை வணங்க அனுகூலம் உண்டாகும். கவலை தீரும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 3, 4
அதிர்ஷ்ட தினம்: பிப். 24
பூராடம்: சமயோசிதமாக செயல்படும் பூராடம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் சுக்கிரன் உச்சமாக மாறுகிறார். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம். வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பஞ்சம விரையாதிபதி செவ்வாயின் பார்வை பலத்தால் பிள்ளைகளின் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் உற்சாகமான காலமாக அமையும். கட்சிப்பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 4, 5
அதிர்ஷ்ட தினம்: பிப். 25
உத்திராடம் - 1: எதிலும் நிதானமாக ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் உத்திராடம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் சூரியனின் சஞ்சாரம் மிகவும் அனுகூலமாக அமைந்திருக்கிறது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் தீர்த்த யாத்திரையும் செல்வார்கள். அக்கம்பக்கத்தினரின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். தொழில் ஸ்தானம் மிக வலுவாக அமைந்திருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுாரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். கலைத்துறையினர் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். மாணவர்கள் புத்தி சாதுாரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவர். கல்வியில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: குருபகவானை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 5, 6
அதிர்ஷ்ட தினம்: பிப். 26
மேலும்
புரட்டாசி ராசி பலன் (17.9.2024 முதல் 17.10.2024 வரை) »