பூரட்டாதி - 4: எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் திறன் படைத்த பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் தனாதிபதி குரு ஆட்சியாக இருப்பதால் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழிலில் மறைமுகப் போட்டிகள் உண்டாகலாம். சக தொழில் புரிவோரிடம் அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் விலகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர், நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியைத் தரும். கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசியல்துறையினருக்கு வீண் செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மனத்தெளிவு அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாயால் மாணவர்கள் எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பர்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு மனஅமைதியளிக்கும். சந்திராஷ்டமம்: மார்ச் 9 அதிர்ஷ்ட தினம்: மார்ச் 3, 4
உத்திரட்டாதி: கனிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். தொழிலாளிகள் தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். பணியாளர்களைப் பொறுத்தவரையில், சக ஊழியர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் அவர்களின் எதிர்பாராத உதவிகளும் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்க வாய்ப்புண்டு. வயதுக்கு வந்த பிள்ளைகளால் பெற்றோருக்கு தேவையான சமயத்தில் உதவிகளும் கிடைக்கப்பெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் வாழ்வில் சீரான வளர்ச்சி இருந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலைக்கும் ஆளாவர். எதிர்காலத்தில் வளர்ச்சிக்காக சிலர் முன்யோசனையுடன் திட்டமிடவும் வாய்ப்புண்டு. கலைஞர்கள் தங்களின் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் காண்பர். ராசியை சனி பகவான் பார்ப்பதால் அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.
பரிகாரம்: வெள்ளிதோறும் பெருமாளை தரிசிக்க வளம் சேரும். சந்திராஷ்டமம்: மார்ச் 10 அதிர்ஷ்ட தினம்: மார்ச் 4, 5
ரேவதி: நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் வளமும் நலமும் பெறும் ரேவதி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் புதனின் சஞ்சாரம் நன்மை தரும் வகையில் அமைந்திருக்கிறது. இதுவரை செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் காரணமாக இருக்கும். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று தங்கள் தொழிலில் ஆதாயம் காண்பார்கள். அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் அனுகூல பயன்கள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்வர். வருமானம் அதிகரிக்கும். சிலர் வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் பொதுமக்களின் தேவையறிந்து செயல்படுவர். தொண்டர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் முதல்தரத் தேர்ச்சி பெறுவார்கள். படிப்பில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கிட நன்மை அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: மார்ச் 11 அதிர்ஷ்ட தினம்: மார்ச் 5, 6
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »