Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் பட்டு ... பேரூர் ஆதீனத்தில் கோவில் திருகுட நன்னீராட்டு பெருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடவு பேரூர் ஆதீனத்தில் கோவில் திருகுட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2023
05:02

பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மகா சிவராத்திரி விழா அனைத்து சிவன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் காவல் தெய்வம் கருப்பண சுவாமிக்கு 16 வது ஆண்டு சந்தன அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இளநீர் காவடி, சந்தன குடம், பால்குடம், திருமாலிருஞ்சோலை நூபுர கங்கை தீர்த்த குடங்கள் பூஜை நடந்தது. தொடர்ந்து வீதிகளில் வலம் வந்து கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரம் தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

‌*பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஸ்ரீ ஞான யோகானந்த ஆசிரமத்தில் 12 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவில், ராஜகணபதி, திரிலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.

‌*பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவில், நேற்று மாலை 6:00 மணி தொடங்கி அதிகாலை 5:00 மணி வரை என நான்கு கால யாக பூஜைகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

*பரமக்குடி ஸ்ரீ குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசுவாமி பாரிவேட்டை விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு அபிஷேகம் நடந்து வெள்ளி கவசம் சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

*எமனேஸ்வரம் சித்தி விநாயகர் கோயிலில் 53 ஆம் ஆண்டு சிவராத்திரி இசை விழா நடந்தது.

தொடர்ந்து பிப்., 18 தொடங்கி மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

*இதேபோல் ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர், நயினார் கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மேலும் பொதுமக்கள் தங்களது குலதெய்வ வழிபாடுகளை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar