பதிவு செய்த நாள்
03
மார்
2023
10:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், சித்திரை திருவிழாவுக்கான, பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, ஏப்ரல், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பதினெட்டு நாள்கள் பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின், முக்கிய நிகழ்வான, தேரோட்டமானது மே.01ம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து, விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் இன்று (மார்ச்.03ம் தேதி) காலை நடை பெற்றது. பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்யட்ட, பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செந்தில், ரங்கராஜன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.