Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் பராமரிப்பு பணிக்காக மண் ... தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவில் நடந்த கிடாவெட்டு விருந்து, 6 ஆயிரம் பேர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நள்ளிரவில் நடந்த கிடாவெட்டு விருந்து, 6 ஆயிரம் பேர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

07 மார்
2023
11:03

திருப்புவனம்: திருப்புவனம் தேரடி வீதி அக்னி வீரபத்ர சுவாமி கோயில் விழாவை ஒட்டி ஆறு வருடங்களுக்கு பிறகு நள்ளிரவில் கிடாவெட்டி 6ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அக்னிவீரபத்ரன் சுவாமி கோயிலில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பச்சைகுடில் விழா பத்து நாட்கள் நடைபெறும், திருப்புவனம் நகர மக்கள் மற்றும் புஷ்பவனேஸ்வரர் தேர் ஆகியவற்றை காவல் காக்கும் அக்னி வீரபத்ரன் சுவாமிக்கு பச்சைகுடில் விழா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் தினசரி வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து வீரபத்ரன் சுவாமி கோயில் வாசலில் உள்ள பச்சைகுடிலில் வைத்து பக்தர்கள் வணங்குவார்கள்.10வது நாள் விழாவில் வீரபத்ரன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கிராம மக்கள் நேர்த்தி கடன் நேர்ந்த பக்தர்கள் சார்பில் 108 ஆட்டு கிடாய்கள் பலியிட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதான விருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்தது. பச்சைக்குடில் விழா பத்து நாட்கள் நடைபெறுவதை ஒட்டி தேரடி வீதி உள்ளிட்ட கரகம் ஆடி வரும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டன. பக்தர்கள் கரகம் ஏந்தி வீதியுலா வருகை தருவதால் தெருக்கள் தூய்மைப்படுத்தப் பட்டதுடன், தெரு மக்களும் குப்பைகள், கழிவுகளை தெருக்களில் வீசி எறியாமல் தூய்மையாக நடந்து கொண்டனர். இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் தெருவில் நடந்த அசைவ அன்னதான விழாவில் பக்தர்கள் விரும்பி பங்கேற்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தொண்டரணி தலைவரும், திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி சார்பில் அக்னி வீரபத்திரனுக்கு வெள்ளி கீரிடம் அனுவிக்கப்பட்டது.

பக்தர்கள் கூறுகையில்: அன்னதான விழாக்கள் பகலில்தான் தொடர்ச்சியாக நான்கு முதல் ஐந்து வரிசைகள் வைத்து உணவு பரிமாறப்படும், ஆனால் பச்சை குடில் நள்ளிரவு அசைவ விருந்து மட்டும் ஒரே சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அமர வைத்து உணவு, கறி உள்ளிட்டவைகள் பரிமாறப்படும், என்றனர்.

கவுன்சிலர்களுக்கு பாராட்டு: பத்து நாட்கள் பச்சைகுடில் திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து தேரடி வீதி வரை வலம் வருவார்கள். 10ம் நாள் விழா அன்று தெருக்களில் அசைவ அன்னதானம் நடைபெறும், இதனையடுத்து கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி ஆகியோர் மேற்கண்ட தெருக்களில் தினசரி மூன்று வேளையும் தூய்மை பணி நடைபெறவும், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கவும், பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்ததையடுத்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா துவங்கியது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், தமிழகத்தில் நேற்று தொடங்கியது. வரும், 28ம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18 அல்லது 19 தேதியில் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ... மேலும்
 
temple news
திருப்பதி;  மே 6 முதல் 8 வரை திருமலையில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாசன் பரிணயோத்சவம் பிரமாண்டமாக ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar