Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ... தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக இரண்டாம் நாள் தீர்த்தவாரி தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம்: துர்கா ஸ்டாலின் நடத்தினார்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம்: துர்கா ஸ்டாலின் நடத்தினார்

பதிவு செய்த நாள்

07 மார்
2023
12:03

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம் இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தார். அவருக்கு  செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமிர்த விஜயகுமார்  வரவேற்றார். கோவில் சார்பில் தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சிவாச்சாரியார்கள் மாலை மரியாதை செய்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகளை செய்தார்.  பின்னர் அவர் நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார். ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து  வழிபட்டார். சிறப்பு ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வருகையை ஒட்டி திருக்கடையூர் கோவில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக துர்கா ஸ்டாலின் மேல பெரும்பள்ளத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் நடத்தி வழிபாடு செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar