Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பண்ணசாமி கோயில் விழாவில் ... திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் விடிய விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 மார்
2023
11:03

ஓசூர்: ஓசூரில் நடந்த, சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், மூன்று மாநிலத்தில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 28ல் துவங்கியது. கடந்த, 1ல் திருக்கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, மலை மீதிருந்து தேர்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரர் கோவிலுக்கு உற்சவமூர்த்தி எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கல்யாணசூடேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை, 11:15 மணிக்கு துவங்கியது. வாச்சீஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை செய்து, தேரில் உற்சவமூர்த்திகள் அமர வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமசிவாய’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர் முதலில் செல்ல, அடுத்தடுத்து, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் தேர், அம்பாள் தேர் சென்றன. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா உட்பட மூன்று மாநிலத்திலிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர்கள் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை எரிந்து பக்தர்கள் வழிபட்டனர்.  முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த மூன்று தேர்களும், மாலையில் தேர்நிலையை அடைந்தன. முன்னதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தி.மு.க., – எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா, காங்., – எம்.பி., செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழுத்தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar