Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரமாகாளியம்மன் கோயிலில் மாசி ... திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் நிறைவு: அதிகரிக்கும் தீப வழிபாடு திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை: மாற்றம் வரும்.. பக்தர்கள் நம்பிக்கை!
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை: மாற்றம் வரும்.. பக்தர்கள் நம்பிக்கை!

பதிவு செய்த நாள்

09 மார்
2023
08:03

காங்கேயம்: காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில், உலக உருண்டை உள்ளிட்ட, 4 பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டி இக்கோவிலின் சிறப்பாக உள்ளது. சுப்பிரமணிய சுவாமியே பக்தர்களின் கனவில் தோன்றி, குறிப்பிட்ட பொருளை கூறி அதை, ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். அந்த உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை தெரிவிப்பார். அதன்பின் சுவாமியிடம் பூ வாக்கு கேட்டு, கனவில் வந்த பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு செய்வர். அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை, அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். இவ்வாறு உத்தரவான பொருள், ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில், அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். கடந்த பிப்., 27 முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், முத்துார், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான, ‘அகிலம்’ என்ற உலக உருண்டை, ‘அத்திரி’ என்ற பசு, ‘அசுவம்’ என்ற குதிரை, இரண்டு திருமாங்கல்ய சரடு ஆகிய, நான்கு பொருட்களை, நேற்று  முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இது சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar