குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 05:03
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. மகா சிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட முக்கிய தினங்களுட்டு பிறகு இன்று உண்டியல் என்னும் பணி நடந்தது. வங்கி பணியாளர்கள், சேவைக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. 8லட்சத்து 88 ஆயிரம் பணமும், 13 கிராம் தங்கமும், 25 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்தன.