பதிவு செய்த நாள்
10
மார்
2023
12:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ பெருவிழா, திருக்கல்யாண வைபவத்துடன் நேற்று நிறைவடைந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த பிப்., 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 3ம் தேதி, தேர்த் திருவிழா கோலாகலமாக நடந்தது. 6ம் தேதி, சரவண பொய்கையில் தீர்த்தவாரி மற்றும் மாசி மக தெப்பல் விழா நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் சீர்வரிசைகளுடன் உற்சவ மண்டபத்தில் குவிந்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்திற்கு பின், வளையல், பூ பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிரம்மோற்சவத்தை ஒட்டி, கந்தபெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். கோவில் அன்னதான கூடத்தில், கல்யாண விருந்து