Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனுார் அம்மன் கோவில் பொங்கல் ... காஞ்சி வரதர் கோவிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் பிரம்ம சாஸ்தா சிற்பம் தஞ்சாக்கூரில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2023
05:03

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தஞ்சாக்கூரில் பிரம்ம சாஸ்தா சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் ஸ்ரீதர், பேராசிரியர் தாமரைக்கண்ணன் கூறியதாவது: புராணங்களின் படி பிரம்மா ஓம் என்ற பிரணவ மந்திரத்தை மறந்து விடுகிறார். முருகன் அவருக்கு குருவாக இருந்து பிரணவ பொருளை உபதேசித்த காரணத்தால் பிரம்ம சாஸ்தா என அழைக்கப்பட்டார். இப்பிரம்ம சாஸ்தா சிற்பங்கள் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் குமரிக்கோட்டம், ஆனுார், பாகசாலை, சிறுவாபுரி, விழுப்புரத்தில் தாதாபுரம், வேலுாரில் மேல்பாடியில் காணப்படுகின்றன. தென் தமிழகத்தில் அரிதாகத்தான் இச்சிற்பம் உள்ளது. தஞ்சாக்கூரில் கண்டறியப்பட்ட பிரம்ம சாஸ்தா சிற்பம் சற்று வித்தியாசமாக உள்ளது. 7 அடி உயரத்தில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கியுள்ளனர். தலையில் சிதைந்த நிலையில் கரண்ட மகுடம், மார்பில் வீரச்சங்கிலி, நான்கு கரங்களுடன் அழகாக காட்சி அளிக்கிறது. வேறு எந்தவித ஆயுதங்களும் செதுக்கப்படவில்லை. வலது முன் கரத்தில் பதாக ஹஸ்தமும், இடது முன் கரத்தில் ஹடிஹஸ்தமும் இடம் பெற்றுள்ளன. இந்த பதாக ஹஷ்தத்தை, பல்லவ ஹஸ்தம் என அழைக்கிறோம். இந்த சிற்பம் கட்டை விரலை மடக்கியவாறு அஸ்தம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்த நான்கு விரல்கள் மூலம் உணர்ந்தும் செய்தி, வேதங்கள் நான்கையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளார் என்பது தான். மேலும் மற்றொரு முன்கரத்தில் ஹடிஹஸ்தமாக செதுக்கியுள்ளனர். பிற்காலத்தில் செதுக்கிய சிலைகளில் இது போன்ற ஹஸ்தங்கள் செதுக்குவது குறைந்துவிட்டன. இது வரை தமிழகத்தில் 7 அடி உயர பிரம்ம சாஸ்தா சிற்பம் வேறு எங்கும் கண்டறியவில்லை. சிற்பத்தின் வடிவமைப்பு முற்கால பாண்டியர்களின் கலையின் உச்ச நிலை என்பதை காட்டுகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
கோவை: மாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar