Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் ... உளுந்தூர்பேட்டை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணி : வாசக்கால் வைக்கும் பூஜை உளுந்தூர்பேட்டை திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
04:03

கருமத்தம்பட்டி: எம்.பாப்பம்பட்டி கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், பல நூறு ஆண்டுகள் பழமையானது. சுற்றுவட்டார கிராம மக்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன், அம்மன் சிரசில் பூ வைத்து வரம் கேட்பது வழக்கம். இக்கோவிலில், கல் வேலைப்பாடுகளுடன் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம் உள்ளிட்டவைகள் புதிதாக நிர்மாணிக்கும் திருப்பணிகள் நடந்தன. சுந்தர விநாயகர், ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனமர் ஸ்ரீ சிவாஜல சுப்பிரமணிய சுவாமி, நவகிரகங்கள், பேச்சியம்மன், கருப்பராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்து, 23 ம்தேதி இரவு, 8:00 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடந்தது..24ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 40 குண்டங்கள் அமைக்கப்பட்டு, நான்கு கால ஹோமங்கள் நடந்தன. இன்று காலை புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டன. காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ கரிய காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், தரிசனம் மகா தீபாராதனை நடந்தது. விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து ஓடிக் ... மேலும்
 
temple news
கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் பூர்ணா நதிக்கரையில் காலடி எனும் அழகிய கிராமத்தில் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar