Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்குநேரி வானமாமலை பெருமாள் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷப வாகனத்தில் அருள்பாலித்த மயிலை கபாலீஸ்வரர்
எழுத்தின் அளவு:
ரிஷப வாகனத்தில் அருள்பாலித்த மயிலை கபாலீஸ்வரர்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2023
09:04

சென்னை, மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதிகளை வலம் வந்து, மயிலை சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 30ம் தேதி அதிகார நந்தி சேவை நடந்தது.

நேற்று முன்தினம் காலை வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்களில் சுவாமி காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, நாகம், காமதேனு, ஆடு வாகனங்களின் புறப்பாடு நடந்தது. நேற்று காலை சவுடல் விமானப் புறப்பாடு நடந்து. இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாளை, தேர் திருவிழா நடக்கிறது. காலை 6:30 மணிக்கு தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:25 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

இன்று தேர் திருவிழா; திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகனத்தில் இறைவன் காட்சி அளித்தார். இன்று நடக்கும் தேர்திருவிழாவை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு சந்திரசேகரர் தேரில் எழுந்தருளி பிரம்மனுக்கு காட்சியருளல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இன்று இரவு தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. வரும், 4ம் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar