சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்ரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
ஏப். 4ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு நந்தவனத்தில் இருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்குப் பூச்சொரிதல் செய்தனர். தொடர்ந்து காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது. 9 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஏப். 11ல் பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்தலும் நடக்கிறது. ஏப். 12 ல் பொங்கல் வைத்தல், அம்மன் வீதி உலா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாடார்கள் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.