கொடைக்கானல் மலைப்பகுதியில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் காவடி எடுத்து உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 11:04
தாண்டிக்குடி , கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப் பகுதியில் பங்குனி உத்தர விழா சிறப்பாக நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. பக்தர்கள் கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தங்கள் எடுத்தும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பறவை காவடி, பால்,பன்னீர் காவடி எடுத்தனர். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக தேரோட்டம் நடந்தது. அன்னதானம் நடந்தது. கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. விழாவில் கொடைக்கானல் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து தீர்த்தம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். நகர் பகுதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.