கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 05:04
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
மானாமதுரை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.கடந்த 1ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாள்களின் போது சுவாமி கமலம்,அன்னம், குதிரை,சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்ட விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து உற்சவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சர்வ அலங்காரங்களுடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.மேலும் சிறுவர்கள் தேர் சுற்றி வரும் போது தேருக்கு முன்னாள் சிலம்பம் சுற்றி வந்தனர்.தேர் நிலையை அடைந்தவுடன் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெற்றன. விழாவில் மதுரை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.