உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 01:04
உடுமலை : தேர் திருவிழாவை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும், பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை, தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு, 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். 15 வது நாளில், திருத்தேரில் அம்மன் எழுந்தருளி, உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் பங்கேற்கும், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.