பதிவு செய்த நாள்
10
ஏப்
2023
03:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்ஸவம் நடந்தது.
கோயிலில் மார்ச் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு இன்று காலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். கொடியேற்றம் முதல் தினம் இரு வேளை நடைபெற்ற யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, புனித நீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜைக்கு பின்பு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தரதேவர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். அங்கு பூஜை முடிந்து அஸ்தரதேவர், சிவாச்சாரியார்களால் தண்ணீருக்குள் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்சவம் நடந்தது. இரவு வீதிஉலா நிகழ்ச்சியிவ் சுவாமி அருள்பாலித்தார்.