பாலப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷே்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2023 06:04
செஞ்சி: பாலப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. செஞ்சி அடுத்த பாலப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நாளை (26ம் தேதி) நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமமும் மாலை 5 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால பூஜையும் நடந்தது. இன்று (25ம் தேதி) காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நாளை காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜையும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது.