செந்துறை, செந்துறை அருகே பட்டிகுளம் கிராமத்தில் யோக சக்தி விநாயகர், மாலையம்மன் கோவில் திருவிழா ஏப் 18-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி,கரும்பு தொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டிகுளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.